To View Month Performance


இயக்க செய்திகள்
  • பொது மக்களின் பேராதரவுடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் விழிப்புணர்வு பிரச்சாரம் 21-பிப்ரவரி-2012

    பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருடந்தோறும் ஆரோக்கியமான மக்கள்  வலிமையான தேசம் என்ற ஆரோக்கிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் பிப்ரவரி 10  முதல் 20 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் தமிழகம் முழுவதும்  நடைபெற்றதுஅதனுடைய துவக்கவிழா  நிகழ்ச்சி கோவையில் 10.02.2012 அன்று நடை பெற்றது. அதனை தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உடற்பயிற்சி வகுப்புகள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள் அரசு மருத்துவ மனைகளை தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள்  முழுவீச்சில் மக்களின் பேராதரவுடன் நடை பெற்றது.

    திருநெல்வேலி மாவட்டம் 

     

    மேலப்பாளையம், ஏர்வாடி பள்ளிவாசல்கள் சுத்தம் செய்யப்பட்டது. (இடமிருந்து)


    நெல்லை மாவட்டத்தில் பிப்ரவரி 10 முதல் 18   ஆம் தேதி வரை  (நடைப் பயிற்சி, ஓட்டப் பயிற்சி) யோஹா மற்றும் உடல் பயிற்சிகளும் நடைபெற்றது . பிப்ரவரி 19 ஆம் தேதி நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம்பேட்டைசுத்தமல்லிபத்தமடைகல்லிடை குறிச்சிவி.கே.புரம்ஏர்வாடி, களக்காடுமூலக்கரைப்பட்டி, போன்ற பகுதிகளில் உள்ள பொது இடங்கள் மற்றும் பள்ளி வாசல் வளாகத்திலும் சுத்தம் செய்யப்பட்டது .

     நெல்லை மாவட்டம்  மேலப்பாளையம் அத்தியடி கீழத் தெருவில் உள்ள நாகூர் மீரான் ஜும்ஆ பள்ளி வாசல் வளாகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட  செயலாளர் மௌலவி ஹைதர் அலி அவர்கள் தலைமையில் சுத்தம் செய்யப்பட்டது .இதே போன்று பேட்டை ஆர்.பி. தெரு பகுதியிலும் சுத்தமல்லி மஸ்ஜிதே இன்ஆம் ஜும்ஆ பள்ளி வாசல் வளாகத்திலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மாநகர தலைவர் மூஸல் காழிம் அவர்கள் தலைமையில் சுத்தம் செய்யப்பட்டது.

     ஏர்வாடியில் பைத்துஸ்  சலாம் பள்ளி வாசலில் நாங்குநேரி வட்ட தலைவர் ஹாலித் அவர்கள் தலைமையில் சுத்தம் செய்யப்பட்டது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தொண்டர் களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் .

    நீலகிரி மாவட்டம்

    பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக குன்-னூ-ரில் இலவச இரத்தப் பிரிவு கண்டறிதல் முகாம் நடைபெற்றது.

    தூத்-துக்-குடி மா-வட்-டம்

    நாகை மா-வட்-டம்

    திண்டுக்கல் மாவட்டம்

    மதுரை மாவட்டம்

    தேனி மாவட்டம்


    வத்தலகுன்டு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியும், பேருந்து நிலையத்தை சுத்தம் செய்தலும்.


     

     


  • மேலும்....

  • விழுப்புரம் மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகம் திறக்கப்பட்டது 21-பிப்ரவரி-2012

    அலுவலகத்தை திறந்து வைத்து உரை நிகழ்த்துகின்றார் பாப்புலர் ஃப்ரண்டின்

    மாநில தலைவர் .எஸ். இஸ்மாயில்

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் பாப்புலர் ஃப்ரண்டின் அலுவலகம் 18.02.2012 அன்று திறக்கப்பட்டது. நிகழ்ச்சியின் துவக்கமாக பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் மு.முஹம்மது இஸ்மாயில் பாப்புலர் ஃப்ரண்டின் கொடியை ஏற்றினார். பின்னர் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் .எஸ். இஸ்மாயில் அலுவலகத்தை திறந்து வைத்து உரை நிகழ்த்தினார். இந்நிகழச்சியில் கள்ளக்குறிச்சி ஐக்கிய ஜமாத் தலைவர் ஹாஜி சுலைமான் அவர்களும் அல் அக்ஸா பள்ளி வாசல் இமாம் அலாவுதீன் அவர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்ட செயலாளர் அபூபக்கர் சித்தீக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

  • மேலும்....

  • பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக நடைபெற்ற சமுதாயபணிகள்!! 21-பிப்ரவரி-2012

    கன்னியாகுமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக மாதவலாயத்தில் வைத்து கடந்த 28.1.2012 அன்று இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவ பிரிவு, காது, மூக்கு, தொண்டை பிரிவு ஆகியவற்றில் சிறந்த மருத்துவ நிபுணர்களைக்கொண்டு இலவச மருத்துவ பரிசோதனைகள், ஆலோசனைகள் மற்றும் விலை மதிப்புள்ள மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் சர்க்கரை நோய் கண்டறியும் சோதனைகளும் நடத்தப்பட்டு அது பற்றிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் PFI  குமரி மாவட்டத் தலைவர் சுல்பிக்கர் அலிSDPI குமரி மாவட்டத் தலைவர் செய்யது அலி, மாதவலாயம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் காதர் ரஹ்மான், மாதவலாயம் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் முஹம்மது ஷா, செயலாளர் காஜா மைதீன் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். மருத்துவ முகாமில் ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு பயன்பெற்றுச் சென்றனர்.


     

    திருப்பூர்: தமிழக அரசு சார்பாக வழங்கப்படுகின்ற முதியோர் உதவித்தொகையினை பெறுவதற்கான‌ விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் பணியையும், அவர்களுக்கு உதவி செய்யும் பணியையும் திருப்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடைபெற்றது.

    தங்களது வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யும் வகையில் முதியவர்களுக்கு தமிழக அரசு பென்ஷன் (உதவித்தொகை) வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இத்தகைய திட்டத்தை பற்றிய தெளிவான விழிப்புணர்வு இல்லாததால், அவர்கள் இதற்காக விண்ணப்பம் செய்வதில்லை. இதனால் முதியவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பணம் அவர்களுக்கு போய் சென்றடைவதில்லை என்பதை கருத்தில் கொண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் சிறிய அளவில் திருப்பூரில் முகாம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
    இதில் கலந்து கொண்ட முதியவர்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், அவர்களுக்காக விண்ண
    ப்பங்களை பூர்த்தி செய்து அதனை உரிய நபர்களிடம் ஒப்படைக்க உதவி செய்தது. சுமார் 150ற்கும் மேற்பட்டவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.



  • மேலும்....

  • காரைக்கால் அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் மறியல் போராட்டம். 13-பிப்ரவரி-2012

    காரைக்கால் அரசு மருத்துவமனை ஊழியர்களின் மெத்தனப் போக்கால் 13.02.2012 அன்று காலை நெஞ்சு வலியால் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் மரணமடைந்தார்.

    காரைக்கால் அரசு மருத்துவமனை ஊழியர்களின் மெத்தனம் மற்றும் நோயாளிகளிடம் காட்டும் மனிதாபிமானற்ற போக்கு ஆகியவற்றின் காரணமாக பொது மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். 13.02.2012 அன்று இவர்களின் மெத்தனப் போக்கினால் ஒருவர் மரணமடைந்ததைஅடுத்து காரைக்கால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காலை 8.15 மணியளவில் நகரின் நுழைவு வாயில் போன்று செயல்படும் அரசலார் ஆற்று பாலத்தில் மறியல் போராட்டத்தை மேற் கொண்டது.

    மறியலை நடத்தும் பாப்புலர் ஃப்ரண்ட்

    தொண்டர்கள்

    மறியலில் கலந்து கொண்ட பொது

    மக்கள்

     

     

     

     





     

  • மேலும்....

  • ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் துவக்க விழா நிகழ்ச்சி கோவையில் நடை பெற்றது 13-பிப்ரவரி-2012

    பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருடந்தோறும் ஆரோக்கியமான மக்கள்  வலிமையான தேசம் என்ற ஆரோக்கிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் பிப்ரவரி 10  முதல் 20 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர் பிரச்சாரம்  நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் அதனுடைய துவக்கவிழா  நிகழ்ச்சி கோவையில் 10.02.2012 அன்று நடை பெற்றது. .இந்நிகழ்ச்சிக்கு  பாப்புலர் ஃப்ரண்டின்  மாநில செயற்குழு உறுப்பினர்   அஹ்மத் பக்ருதீன் தலைமை தாங்கினர்பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை  மாவட்ட தலைவர் ராஜா உசேன் வரவேற்புரை வழங்கினார்சிறப்பு விருந்தினராக  பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின்  மாநில தலைவர்  .எஸ். இஸ்மாயில், கோவை மாநகர மேயர் செ. மா. வேலுச்சாமி அவர்கள் மற்றும் கோவை அரசு மருத்துவமனை சார்பாக  டாக்டர். சிவபிரகாசம் ஆகியோர் பங்கு பெற்றனர். இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் அங்கு நடைபெற்ற  யோகா வகுப்புகளிலும் பங்கெடுத்தனர்.

    கோவை

    பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா

    மாநில தலைவர் A .S இஸ்மாயில்

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    யோகாசன வகுப்பில் கலந்து கொண்ட பொது மக்கள்

    கோவை மாநகர மேயர் செ மா வேலுச்சாமி

    யோகாசன வகுப்பில் பாப்புலர் ஃப்ரண்டின்

    மாநில தலைவர் மற்றும் கோவை மாநகர மேயர்

    திருப்பூர் 

    திருப்பூரில் நடைபெற்ற துவக்க விழா

  • மேலும்....

  • தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 7 சதவிகித இடஓதுக்கீடு வழங்க வேண்டும் பாப்புலர் ஃப்ரண்ட் பொதுக்குழு தமிழக அரசுக்கு கோரிக்கை 13-பிப்ரவரி-2012

    ]

    தலைமை உரையாற்றும் பாப்புலர் ஃப்ரண்டின் 

    மாநில தலைவர்  .எஸ். இஸ்மாயில்

    ஆண்டறிக்கையை சமர்ப்பிக்கும் மாநில

    பொதுச் செயலாளர்  . ஹாலித் முஹம்மத்

    சிறப்புரையாற்றும் எஸ்.டி.பி..ன்

    தேசிய தலைவர் . அபூபக்கர்

  • மேலும்....

  • பாப்புலர் ஃப்ரண்டின் ஜனவரி மாத ரிப்போர்ட் 12-பிப்ரவரி-2012

    சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக செய்துவரும் சமூக மேம்பாட்டிற்கான பணிகளை ஒவ்வொரு மாதமும் தெரிவிக்கும் வகையில், சென்ற ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக செய்த நலதிட்ட உதவிகளை பட்டியலிடுகிறோம்.


     

    ஜனவரி - 2012 (சமூக மேம்பாட்டு பணிகள் / உதவிகள்)
    1. மதுரை: பெரியார் நகர் பள்ளி வாசலுக்கு ரூ. 19,200/- மதிப்பில் ஆழ்குழாய் கிணறு (BORE WELL) போட்டு கொடுக்கப்பட்டது. மேலும் ரூபாய் 4622/- க்கு கல்வி உதவியும், அனாதையான ஜனாஸா ஒன்றும் அடக்கம் செய்யப்பட்டது.

    2. 
    கோவை: வடக்கு மேட்டுப்பாளையம் புளியம்பட்டி பள்ளிவாசலுக்கு கட்டுமானப் பணிக்காக ரூபாய் 22,000 க்கு மணல் வாங்கி கொடுக்கப்பட்டது.


    3. 
    புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உள்ள பள்ளிவாசலுக்கும், தஞ்சை தெற்கு நெல்லடிக்கொல்லை பள்ளிவாசலுக்கும் சந்தூக் வாங்கி கொடுக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 29,768/-.


    4. திருப்பூர்: வடுகன்காளிப்பாளையத்தில் 250 அடி நீளத்திற்கு சாலை அமைத்து தரப்பட்டதுடன் சாலையின் இரண்டு பக்கமும் கழிவு நீர் செல்வதற்காக வாய்கால் போன்று கட்டி தரப்பட்டது.

    5. 
    நெல்லை: பெண்களுக்காக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 270 பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் விபத்து மற்றும் மருத்துவ உதவியாக ரூபாய் 23,500 வழங்கப்பட்டது. வியாபாரம் செய்ய உதவியாக ரூபாய் 8400/- மற்றும் ஜனாஸா அடக்கம் செய்ய ரூபாய் 3500/-ம் வழங்கப்பட்டது.

    6. 
    கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் மருத்துவ உதவியாக ரூபாய் 32,450 /- ம், திட்டுவிளையில் இறந்து போன ஒருவரின் குடும்ப செலவிற்காக ரூபாய் 5000/-ம், ஏழைப்பெண் ஒருவரின் திருமணத்திற்காக‌ 21,200/- ரூபாயுடன் 1 1/2 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது.

    7. 
    நாகப்பட்டினம்: கல்வி உதவித்தொகையாக ரூபாய் 3000/-ம், ஏழை குடும்பத்திற்காக ரூபாய் 2000/-ம் வழங்கப்பட்டது.

    8. 
    தஞ்சை தெற்கு: தீ விபத்தில் பாதிக்கபட்ட 2 வீடுகளுக்கு ரூபாய் 15,000/- நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.

    9. திருச்சி: NWF சார்பாக ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 3000/- ம், பட்டுப்புடவையும், ரூபாய் 1500/- மதிப்பில் பாத்திரங்களும் வழங்கப்பட்டது.

    10. தஞ்சை: திருமணத்திற்கு உதவியாக ரூபாய் 4750/-ம், கல்விக்காக ரூபாய் 2500/-ம் வழங்கப்பட்டது.

    11. சென்னை:
     6 மாதக்குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 24,500/-ம், வலிப்பு நோயால் அவதிப்பட்டு வரும் ஒரு சிறுவனின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 50/- ம், +2 வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரூபாய் 4500/- வழங்கியதுடன் வெள்ள நிவாரண உதவியாக 3 நபர்களுக்கு தலா ரூபாய் 2000/- வீதம் மொத்தம் ரூபாய் 6000/- வழங்கப்பட்டது.

    சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவருக்கு நமது துறையின் சார்பில் மீன்பாடி வண்டி ஒன்று வழங்கியிருந்தோம். தினமும் 150 முதல் 170 வரை மட்டுமே சம்பாதித்து வந்த அவர் தற்போது நமது உதவிக்குப்பின் 350 முதல் 500 வரை சம்பாதிப்பதாக கூறுகிறார். அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்!

    கோவை சிறைச்சாலையில் இருக்கும் முஸ்லிம் சகோதரர்களுக்கு ரூபாய் 2000/- செலவில் மொஹரம் மாதத்தில் விருந்து கொடுக்கப்பட்டது.

    1. திருமண உதவியாக 5 பெண்களுக்கு ரூபாய் 86,000 ரொக்கமும், 16 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது.

    2. ஊனமுற்ற ஒரு நபருக்கு ரூபாய் 1500/- க்கு காலணி வாங்கி கொடுக்கப்பட்டது.

    3. கம்யூட்டர்  வாங்குவதற்காக ரூபாய் 4,000/-மும்,  மருத்துவ உதவியாக சுமார் 1,23,000/- ரூபாயும் வழங்கப்பட்டது.

    4. கரும்புக்கடையில் வியாபாரம் செய்வதற்காக ரூபாய் 3000/- மற்றும் இரண்டு ஜனாஸாக்கள் அடக்கமும் செய்யப்பட்டதுடன், கோவை ஜி.எம் நகர் மற்றும் கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் சுத்தம் செய்யப்பட்டது. துப்புறவு தொழிலாளர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.


    12.  வேலூர்:  சட்டக்கல்லூரி மாணவர்கள் 3 நபர்களுக்கு கல்வி உதவித்தொகை யாக ரூபாய் 30,000/- வழங்கப்பட்டது.

    கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 22 யூனிட்கள் இரத்த தானம் செய்யப்பட்டது.


    13. ராமநாதபுரம்: 3 ஏழைகளுக்கு திருமண உதவியாக 1.5 லட்சம், மருத்துவ உதவியாக ரூபாய் 3000/-, கொதகுடியில் வீடு புரணமைப்பதற்காக ரூபாய் 14000/- வழங்கப்பட்டது.

    கடந்த மாதம் மட்டும் சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பாக ரூபாய் 6,84,643/- பல்வேறு பணிகளுக்கு செய்துள்ளோம்.

  • மேலும்....

  • எகிப்து பாராளுமன்றத்தில் ‘அதான்’ அழைப்பை விடுத்த எம்.பி 09-பிப்ரவரி-2012

    Egyptian Salafi MP calls to prayer in parliament session, met with anger

    கெய்ரோ:எகிப்து பாராளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது எம்.பி ஒருவர் பாங்கு(தொழுகைக்கான அழைப்பு) கூறியது சர்ச்சையானது. கடந்த செவ்வாய்க்கிழமை அஸர்(மாலைநேர) தொழுகை வேளையில் ஸலஃபி கட்சியான அந்நூரை சார்ந்த எம்.பி மம்தூஹ் இஸ்மாயீல் எழுந்து அதான் கூற துவங்கினார். உடனே சபாநாயகர் ஸஅத் அல் கதாதனி அமைதியாக அமருமாறு கூறினார். ஆனால் இஸ்மாயீல் அதனை பொருட்படுத்தாமல் தனது அதானை பூர்த்தி செய்தார்.

    ‘நீங்கள் வேண்டுமானால் வெளியே மஸ்ஜிதுக்கு சென்று அதான் கூறி தொழுகை நடத்துங்கள். இது விவாதம் நடைபெறும் இடம்’ என சபாநாயகர் கூறினார். ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு வேறு வழிகளை தேடலாம் என கூறிய சபாநாயகர் நடப்பு கூட்டத்தில் பேசக்கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.

    பாராளுமன்ற கூட்டத்தின்போது எம்.பிக்களுக்கு தொழுகை நஷ்டப்படுவதாகவும், இது குறித்து தீர்வு காணலாம் என கூறிய சபாநாயகர் தனது வாக்குறுதியை பேணவில்லை என்றும் இஸ்மாயீல் குற்றம் சாட்டினார். அதேவேளையில் கால்பந்து விளையாட்டு இஸ்லாத்திற்கு எதிரானது என ஸலஃபி மார்க்க அறிஞர் ஷேக் அப்துல் முனீம் அல் ஷாஹத் ஃபத்வா(மார்க்க தீர்ப்பு) வழங்கினார். பின்னர் அவரது தீர்ப்பு சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து தனது தீர்ப்பை திருத்தி வெளியிட்டார். வர்த்தகம் அடிப்படையிலான கால்பந்து விளையாட்டை இஸ்லாம் தடுத்துள்ளது என அவர் விளக்கம் அளித்தார்.

    கடந்த வாரம் எகிப்தில் கால்பந்து போட்டி நடக்கும் போது ஏற்பட்ட கலவரத்தில் 74 பேர் மரணமடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஷேக் அப்துல் முனீம் இந்த ஃபத்வாவை வழங்கினார்.

  • மேலும்....

  • மேலும்....

  • சங்கரன் கோவில்: கலவரக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! முஸ்லிம்- தலித் ஒற்றுமையை பலப்படுத்த இரு தரப்பு தலைவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் வேண்டுகோள்! 08-பிப்ரவரி-2012

    நெல்லை மாவட்டத்தில் (மேற்கு) சங்கரன்கோவில் கழுகுமலை ரோட்டில் முஸ்லிம்கள் மற்றும் தலித்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். நட்புணர்வோடும், சுமூகமாகவும் வாழ்ந்து வரும் இவர்கள் மத்தியில் பகையை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு சில சமூக விரோத விஷமிகள் சமீபகாலமாக பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்துள்ளனர்.

    அதன் ஒரு பகுதியாகத்தான் நேற்று (7.02.2012) தலித்கள் பகுதியில் நடந்த கோவில் திருவிழாவின் ஊர்வலம் கழுகுமலை ரோடு பள்ளிவாசல் அருகே வரும்போது ஊர்வலத்தில் இருந்த விஷமிகள் சிலர் பள்ளிவாசலின் உள்ளே செருப்புகளை வீசியும், வெடிகளை வெடித்தும் பிரச்சனை செய்து விட்டு சென்றுள்ளனர். இதனைப் பார்த்த முஸ்லிம்கள் காவல் துறையினரிடம் புகõர் கொடுத்துள்ளனர். பிரச்சனையின் தீவிரத்தை உணராத காவல் துறையினரோ சில காவலர்களை மட்டும் சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளனர்.

    பின்னர் மீண்டும் அந்த பகுதிக்கு ஊர்வலத்தினர் வரும்போது பிரச்சனை செய்துள்ளனர். அதனை தடுக்க வந்த காவல் துறையினரையும் தாக்கிவிட்டு பிரச்சனையை தொடரவே இருதரப்பிலும் மோதல் ஏற்பட்டுள்ளது.

    மோதல் கலவரமாக மாறி இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் கூடி தாக்குதலில் ஈடுபட்டதோடு கண்ணில் பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கிதீயும் வைத்துள்ளனர்.

    சில மணி நேரம் நீடித்த கலவரம் எஸ்.பி. தலைமையிலான போலீஸ் படை வந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசிய பின்பு கட்டுக்குள் வந்துள்ளது. கலவரத்தில் திட்டமிட்டே முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்கள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

    இதனை பார்க்கும் பொழுது முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டே ஒரு குழு செயல்பட்டுள்ளது தெளிவாகின்றது.

    நெல்லை மாவட்டம் மேற்கு பகுதியில் கலவரத்தை ஏற்படுத்த பாசிஸ்டுகள் அவ்வப்போது முயன்று வருவதும், கடந்த